கிசான் மித்ரா தடி: பாம்பு அச்சுறுத்தலிலிருந்து விவசாயிகளை காக்கும் புதிய தொழில்நுட்பம் | இயற்கை வேளாண்மை
இரவும் பகலும் இளைப்பாறாமல் உழைக்கும் விவசாயிகள், இரவு நேரத்தில் வயல் வெளிகளில் பணிசெய்யும்போது ஊர்வன (பாம்பு), காட்டுப்பன்றி, நாய் போன்ற உயிரினங்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் பாம்புகளின் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.
Thank you for reading this post, don't forget to subscribe!
கிசான் மித்ரா (KISAN MITRA CHHADI) — பார்க்க ஒரு சாதாரண ஊன்று கோல் போல் தோன்றும்இரவு நேர வயல் ரோந்தில் இந்தக் கருவி கைகொடுக்கிறது
46,000+
இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்பு கடியால் உயிரிழப்பு
82–97%
மரணங்கள் மருத்துவமனை வெளியே நிகழ்கின்றன
இந்தியாவில் பாம்பு கடியால் ஒவ்வொரு ஆண்டும் சுமாரக 46,000 பேர் உயிரிழக்கின்றனர். மேலும் 1.4 முதல் 2.8 மில்லியன் வரையிலான உயிலழப்பு அல்லாத சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்திய விஞ்ஞானிகள் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக ‘கிசான் மித்ரா (KISAN MITRA CHHADI)’ என்ற கைத்தடி கருவியை உருவாக்கி உள்ளனர்.
இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள்?
இந்தியாவில் சுமாரக 350 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் 10% மட்டுமே விஷமுள்ளவை — நல்ல பாம்பு (Cobra), கட்டு வீரியன் (Krait), கண்ணாடி வீரியன் (Russell’s Viper), சுருட்டை வீரியன் (Saw-scaled Viper). இதனால்தான் பாம்பைக் கண்டால் பொதுவாக படையும் நடுங்கும் என்பார்கள்.
கிசான் மித்ரா தடி எப்படி செயல்படுகிறது?
பார்ப்பதற்கு ஒரு சாதாரண ஊன்று கோல் போலவே தோன்றும் இந்த கருவி, 100 மீட்டர் தூரம் வரை பாம்புகள் மற்றும் அச்சமூட்டும் விலங்குகளை அடையாளம் காண வல்லது.
🔬 தொழில்நுட்ப அம்சங்கள்
Vibration Alert
பாம்பை நெருங்கும்போது உடனடி அதிர்வு எச்சரிக்கை — கையில் உணர்வு மூலம் தெரியும்
Smart Sensor
உள்ளிட்ட சென்சார் 100 மீட்டர் வரை துல்லியமாக விலங்குகளை கண்டறியும்
எளிய பயன்பாடு
இரவில் தரையில் ஊன்றி வைத்து பொத்தானை அழுத்தினால் போதும் — டார்ச் லைட் போல
இரவு நேர பாதுகாப்பு
மூன்று மணி நேர மின்சாரத்தில் நீர்ப்பாசனம் செய்யும்போது வயல் வரப்பில் நடக்க பயன்படும்
பாம்பு கடித்தால் — செய்ய வேண்டியவை
✅ உடனடியாக செய்யுங்கள்
1கடிபட்டவரை அமைதியாக வைத்திருங்கள் — அதிகம் அசைந்தால் விஷம் வேகமாக பரவும்.
2கடிபட்ட இடத்தை இதயத்தை விட கீழே வைத்திருங்கள் — இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும்.
3கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரால் மெதுவாக கழுவுங்கள்.
4பாம்பின் வண்ணம், தோற்றம், அளவு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் — மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.
5உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் — Anti-venom injection மட்டுமே நிரந்தர தீர்வு.
⛔ இவற்றை செய்யாதீர்கள்
✗கடிபட்ட இடத்தை வெட்டி வாயால் உறிஞ்சக்கூடாது — பயன்படாது, நோய் பரவும்.
✗கடிபட்ட இடத்தில் கட்டுப்போடக்கூடாது (Tourniquet) — திசுக்கள் நசிந்துவிடும், கை / கால் போகலாம்.
✗நாட்டு வைத்தியம் / மூலிகை சிகிச்சை மட்டும் நம்பி தாமதிக்கக்கூடாது — விலைமதிப்பற்ற நேரம் வீணாகும்.
✗கடிபட்ட இடத்தில் ஐஸ் வைக்கக்கூடாது — குளிர்ச்சி திசு சேதத்தை அதிகமாக்கும்.
✗பாம்பை பிடிக்கவோ கொல்லவோ முயற்சிக்கக்கூடாது — மீண்டும் கடிக்கலாம்; நேரமும் வீணாகும்.
✗மருந்துக் கடையில் சொந்தமாக மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது — Anti-venom மட்டுமே முதல் தீர்வு.
(அண்மையில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவ்கான், கிசான் மித்ரா தடியை அறிமுகப்படுத்தினார்.)
Leave a Reply