Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

மாவட்டத்துக்கு ஒரு மாதிரி சூரியசக்தி கிராமம்! 

தமிழ்நாட்டில் சூரிய சக்தி

தமிழ்நாட்டில் 37 கிராமங்கள் தேர்வு!

Thank you for reading this post, don't forget to subscribe!

தமிழ்நாடு மின் வாரியம் மாநிலம் முழுவதும் சூரிய சக்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் முக்கியமான திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. சென்னையை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாதிரி சூரியசக்தி கிராமம் அமைக்கும் திட்டத்தின் கீழ், 37 கிராமங்களை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது (4-வது இடம்). மார்ச் 2026 நிலவரப்படி, தினசரி சூரிய சக்தி பயன்பாடு 5.48 கோடி யூனிட்டுகளாகவும், உச்சபட்ச உற்பத்தி 7,276 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. கமுதியில் உள்ள 648 MW சூரிய சக்தி திட்டம் உலகின் மிகப்பெரிய ஒற்றை-இட திட்டங்களில் ஒன்றாகும்.

திட்டத்தின் பின்னணி

மத்திய அரசு 2024-ம் ஆண்டு தொடங்கிய ‘பி.எம். சூரிய கர் முப்தி பிஜிலி யோஜனா’ என்ற மகத்தான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சூரியசக்தி கிராம திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வீடுகளில் சூரியசக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு 30,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களும் கிராமங்களும்

சென்னையை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி சூரியசக்தி கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட 37 கிராமங்கள் பின்வருமாறு:

மாவட்டம் கிராமம்
செங்கல்பட்டு கோவளம்
காஞ்சிபுரம் தாமல்
பெரம்பலூர் சிறுவாச்சூர்
தர்மபுரி அதகப்பாடி
கிருஷ்ணகிரி மகாதேவகொள்ளஹள்ளி
திருவண்ணாமலை பாளையனூர்
அரியலூர் செந்தூரை
ஈரோடு மொடச்சூர்
கன்னியாகுமாரி செண்பகராமன்புதூர்
மதுரை கம்பூர்
நாகை பிரதாபராமபுரம்
மயிலாடுதுறை மன்னம்பந்தல்
புதுக்கோட்டை திருமயம்
ராமநாதபுரம் தங்கச்சிமடம்
ராணிப்பேட்டை வன்னிவேடு
சிவகங்கை எடையமேலூர்
தென்காசி அனைந்தபெருமாள் நந்தனூர்
திருவள்ளூர் நடுக்குத்தகை
திருவாரூர் புலிவலம்
திருநெல்வேலி தெற்கு வள்ளியூர்
திருச்சி திருப்பெஞ்சீலி
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல்
வேலூர் சேனூர்
விருதுநகர் பலவன்நத்தம்
திருப்பத்தூர் ஆத்தூர்குப்பம்
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி
கள்ளக்குறிச்சி நயினார்பாளையம்
சேலம் பாப்பம்பாடி
திருப்பூர் எல்லப்பாளையம்புதூர்
கோவை அரசூர்
கடலூர் கடம்புளியூர்
நீலகிரி ஹப்பத்தலை
தஞ்சாவூர் திருமலைசமுத்திரம்
கரூர் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி
நாமக்கல் ஓ. ராஜபாளையம்
தேனி அரண்மனைபுதூர்
விழுப்புரம் திருச்சிற்றம்பலம்

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்தமிழ்நாட்டில் சூரிய சக்தி

கிராமத்தில் அமைக்கப்படும் வசதிகள்

மாதிரி சூரியசக்தி கிராமம் என தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும், சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அங்குள்ள அனைத்து வீடுகள், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பொது பயன்பாட்டு கட்டிடங்களுக்கும் சூரியசக்தி மின்சாரம் செய்யப்பட உள்ளது.

மேலும், சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் தெரு விளக்கு, தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்ப் ஆகியவையும் அமைக்கப்படும். இதன்மூலம் ஒரு சூரியசக்தி கிராமம் அமைக்க மத்திய அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.

மின் வாரியத்தின் நடவடிக்கைகள்

தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் சூரியசக்தி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, எவ்வளவு கிலோ வாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்து, அதன் பயன்பாட்டிற்காக கான மின் வழித்தடம் உள்ளிட்ட வசை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

5,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்

5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பசுமை கிராமம் உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் முடிவடைந்தும், மின் நிலையம் அமைக்கப்பட்டு, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

பசுமை ஆற்றல் 

மாநிலம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ளும் இந்த சூரியசக்தி கிராம திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், மக்களின் மின் கட்டணச் சுமையை குறைப்பதிலும் மிக முக்கிய பங்காற்றும். கிராமங்களை பசுமை ஆற்றல் மையங்களாக மாற்றும் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் எதிர்கால ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அரசு கார்பன் சமநிலை (Carbon Neutral) இலக்கை அடைய, சூரிய சக்தி பயன்பாட்டை, குறிப்பாக வீட்டுச் சூரிய சக்தி (Rooftop Solar) மற்றும் வேளாண்மைக்கு, அதிக அளவில் ஊக்கப்படுத்தி வருகிறது. 

Please follow and like us:
error2
fb-share-icon20
Tweet 20
fb-share-icon20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email2
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube