தமிழ் நே(ச்)சர்

மண்ணுக்கும் மக்களுக்கும்…

ஆண்டுக்கு 3 முறை காய்க்கும் மாம்பழம்; 

Mango F 2

ஓர் உழவனின் அசாத்திய கண்டுபிடிப்பு!

ஆனந்த் மஹிந்திராவின் ஆதரவு

Thank you for reading this post, don't forget to subscribe!

கோட்டாவில் வசிக்கும் ஒரு விவசாயி, வருடம் மூன்று முறை மாம்பழம் தரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார். ஆம், கேள்விப்படவே ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா!

mango f

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயது விவசாயி கிஷன் சுமன், ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் ‘சதாபஹார்’ என்ற புதிய மாம்பழ இனத்தை உருவாக்கியிருக்கிறார். வெறும் வயல் வேலைகளோடு நின்றுவிடாமல், கற்றுக்கொண்ட ஒட்டுக்கட்டும் (grafting) நுட்பத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இந்தப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இந்த உழவர்.

2000-ம் ஆண்டு அவர் தன் தோட்டத்தில் ஒரு மாமரத்தை கவனித்தார். அதன் இலைகள் அடர்த்தியான பச்சை நிறத்தில் இருந்தன; வளர்ச்சியும் சிறப்பாக இருந்தது. அந்த மரம் ஜனவரி-பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர் என மூன்று முறை பூக்கிறது என்று கண்டுபிடித்தார். ஐந்து மரங்களில் ஒட்டுக்கட்டி சோதனைகளை மேற்கொண்டு, பதினைந்து ஆண்டுகள் தொடர் உழைப்பின் பின்னால், ‘சதாபஹார்’ என்ற இனம் உருவானது. 

ஒவ்வொரு பருவமும் தொடர்ந்து மகசூல் தரும் இந்த இனம், இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, ஈராக், ஈரான், பல ஆப்பிரிக்க நாடுகள் என எல்லா இடங்களிலும் இந்தத் தாவரத்தை வாங்கப் போட்டி போடுகிறார்கள். 

அல்போன்சோவின் சுவையில் ஒரு புரட்சி!

a bunch of sadabahar mangoes 500x667

சதாபஹார் ஒரு குட்டை இனம் (dwarf variety). பழம் அடர் ஆரஞ்சு நிறத்திலும், இனிப்பான சுவையிலும் இருக்கும். நார்ச்சத்து மிகவும் குறைவு — இதுவே மற்ற இனங்களிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டும் அடையாளம். Press Information Bureau அல்போன்சோவின் சுவைக்கு இணையான இந்த மாம்பழம், கிச்சன் தோட்டத்திலும், அடர்வான தோட்ட வேளாண்மைக்கும் ஏற்றதாக இருக்கிறது. 250 முதல் 350 கிராம் வரை எடை கொண்ட பழங்கள் மரத்திலேயே நன்கு கனிந்த பிறகுதான் பறிக்க வேண்டியிருக்கும். புயல் காற்றிலும் கூட உதிர்ந்து விழாது என்பது இன்னொரு சிறப்பு! 

15 ஆண்டு நோன்பு — NIF அங்கீகாரம்

தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை (NIF) இந்தக் கண்டுபிடிப்பை அறிந்து, 11 ஆண்டுகள் வரை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அந்தக் காலகட்டத்தில் சுமனுக்கு ஒரே வேண்டுகோள் — கன்றுகளை யாருக்கும் விற்காதீர்கள், யாருக்கும் கொடுக்காதீர்கள் என்று.  கட்டளையை அப்படியே மதித்தார் கிஷன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, National Innovation Foundation உதவியோடு கன்றுகளை விற்கத் தொடங்கினார். சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா என பல மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் நேரில் வந்து கன்றுகளை வாங்கிச் சென்றனர். ராஷ்ட்ரபதி பவனின் முகலாய் தோட்டத்திலும் சதாபஹார் மரங்கள் நடப்பட்டு பழுத்து காய்க்கின்றன. இதுவே இந்தக் கண்டுபிடிப்பின் ஒரு பெரிய அங்கீகாரம்!

ஆனந்த் மஹிந்திராவின் ஆதரவுhttps://x.com/anandmahindra/status/2037723551008977344?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2037723551008977344%7Ctwgr%5E46ea0f464ffc659fb4fef27bb47bee5354422544%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-24626996251436242337.ampproject.net%2F2603032146000%2Fframe.html

 

இந்தக் கதை இணையத்தில் பரவிய போது, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அதில் மனதார ஈடுபட்டார். அவர் X தளத்தில் எழுதினார்: “இந்த இனம் பரவலாகப் பயிரிட முடியுமென நிரூபணமானால், விவசாயிகளின் வருமானத்திலும், சப்ளை சங்கிலியிலும், மாம்பழம் அனுபவிக்கும் விதத்திலும் புரட்சியே நிகழும்.” 

பொருளாதாரம் வளர வளர, வேளாண்மை சுருங்கும் என்பது பொது நம்பிக்கை. ஆனால் சுருங்குவது வேளாண்மை அல்ல — நம் கற்பனையே என்று மஹிந்திரா சாடினார். United States மேலும், “கிஷன் சுமன் தன் முயற்சியை விரிவாக்க விரும்பினால், நான் முழு மனதோடு ஆதரிக்கத் தயார்” என்று அறிவித்தார்.

இது வெறும் மாம்பழக் கதை அல்ல!

suman in his orchard 500x667

ஒரு மனிதன், பள்ளியில் படிக்கவே வாய்ப்பில்லாமல், தன் குடும்பத் தொழிலான தோட்டக்கலைப் பயிர் வேலை செய்தவர், Press Information Bureau தன் கவனிப்பாலும் விடாமுயற்சியாலும் ஒரு நாட்டு அதிசயத்தையே படைத்திருக்கிறார். கோட்டாவில் தோன்றிய இந்த ‘சதாபஹார்’ கனவு, இப்போது ராஷ்ட்ரபதி பவன் வரை வாசம் பரப்பி, உலகம் முழுவதும் கிளைகள் விரிக்கிறது.

மாம்பழம் மட்டும் அல்ல — மனித சாமர்த்தியமும் ஒவ்வொரு பருவத்திலும் காய்க்கும்!

Info Card

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயது விவசாயி கிஷன் சுமன், ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் 'சதாபஹார்' என்ற புதிய மாம்பழ இனத்தை உருவாக்கியிருக்கிறார். வெறும் வயல் வேலைகளோடு நின்றுவிடாமல், கற்றுக்கொண்ட ஒட்டுக்கட்டும் (grafting) நுட்பத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இந்தப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இந்த உழவர்.
Please follow and like us:
error2
fb-share-icon20
Tweet 20
fb-share-icon20
RSS20
Follow by Email2
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube