தமிழ் நே(ச்)சர்

மண்ணுக்கும் மக்களுக்கும்…

புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்? -அண்ணல் அம்பேத்கர்

ambedkar buddhism

ரஷ்ய பாணி கம்யூனிசம் இரத்தக் களறியான ஒரு புரட்சியின் மூலம் அதனைச் சாதிக்க முயல்கிறது. பௌத்த கம்யூனிசமோ இரத்தம் சிந்தாத மனப் புரட்சியின் வழியாக அதனைக் கொண்டு வருகிறது. இதனால்தான், புத்த மதத்தை நான் விரும்புகிறேன்.

Thank you for reading this post, don't forget to subscribe!

கம்யூனிசத்தைத் தழுவ ஆர்வமாக இருப்பவர்கள், சங்கம் ஒரு கம்யூனிச அமைப்புதான் என்பதை மனதில்கொள்ள வேண்டும். – டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் பௌத்தத்தைப் பற்றிப் பேசும்போது, அவரிடம் பொதுவாக இரண்டு கேள்விகளைக் கேட்பார்கள். எந்த இடமாக இருந்தாலும், அந்த இரண்டு கேள்விகளும் மாறவே மாறாது.

புத்த மதத்தை அவர் ஏன் விரும்புகிறார் என்பது முதல் கேள்வி; இன்றைய சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் அது உலகுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது இரண்டாவது கேள்வி.

அதற்கு அம்பேத்கர் அளித்த பதில்:

புத்த மதம், அதாவது பௌத்தம், மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கை வைப்பதையும் எதிர்ப்பதைப் போதிக்கிறது. அது கருணையை, அன்பைப் போதிக்கிறது. அது சமத்துவத்தைப் போதிக்கிறது.

இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். இது கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறான். புத்த மதத்தின் இந்த மூன்று கோட்பாடுகள் என்னைப் பெரிதும் கவர்கின்றன.

என்னைக் கவர்ந்த இந்த மூன்று கோட்பாடுகள் இந்த உலகத்திலுள்ள அனைவரையும் கவரவேண்டும். ஆண்டவனோ, ஆன்மாவோ சமுதாயத்தில் யாருக்கும் உதவாது; காப்பாற்றவும் முடியாது.”

உலகத்தை அழிக்கும், அதுவும் குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றுள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம். இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.

மார்க்சியமும் கம்யூனிசமும் சமயச் சார்பற்ற விவகாரங்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. இந்த அம்சம் அனைத்து நாடுகளின் சமயச் சார்பு அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்துள்ளது.

சமயச் சார்பு அமைப்புக்கு இது முற்றிலும் இயல்பானதே. இன்றைய நிலைமை சமயச் சார்பற்ற அமைப்புடன் சம்பந்தப்படாது இருந்தாலும், அதன் அடித்தளம் சமயச் சார்பற்றதாகவே இருக்கிறது.

சமயத்தின் அங்கீகாரம் பெற்றிருந்தாலொழிய, சமயச் சார்பின்மை அமைப்பு நீண்ட காலம் நீடிக்க முடியாது. சமயத்தின் அங்கீகாரம் கிடைப்பதும் அரிதே.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பௌத்த மத நாடுகளின் மனப்போக்கு கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்திருப்பது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

பௌத்த மதம் என்னவென்று அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே இதன் பொருள். என்னைப் பொறுத்தவரையில், பௌத்த மதம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால் என்று கூறுவேன்.

ரஷ்ய பாணி கம்யூனிசம் இரத்தக் களறியான ஒரு புரட்சியின் மூலம் அதனைச் சாதிக்க முயல்கிறது. பௌத்த கம்யூனிசமோ இரத்தம் சிந்தாத மனப் புரட்சியின் வழியாக அதனைக் கொண்டு வருகிறது.

வன்முறை மூலம் இது சாதிக்கப்படவில்லை; மன மாற்றத்தின் மூலமாகவே இது சாதிக்கப்பட்டது. எனினும் 2,500 ஆண்டுகளாக அது நிலைத்து நின்று வருகிறது. ஒரு கால் அது சிதைந்திருக்கலாம். ஆனால் அது இன்னமும் நிலைத்து நிற்கிறது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று?

இந்தக் கேள்விக்கு ரஷ்யக் கம்யூனிசம் பதிலளிக்க வேண்டும். வேறு இரண்டு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் கூறியாக வேண்டும்.

புத்தரின் போதனைகள் துரதிர்ஷ்டவசமாகச் சரியான முறையில் அர்த்தப்படுத்திக் கொள்ளப்படவில்லை; புரிந்துகொள்ளப்படவில்லை. அவரது போதனைகள் பல சித்தாந்தங்களின், சமூகச் சீர்திருத்தங்களின் தொகுப்பாகும்.

இது முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பௌத்தம் சமூகத்துக்கு நல்லது செய்யக்கூடியது.

புத்த சமயம் சமூகப் போதனையே என்பதையும், சமூகத்திற்குப் புத்துயிரளிப்பது என்பதையும் எக்காலத்திலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும் என்பதையும் உணர்ந்துகொள்ளும்போது, புத்த சமயம் ஏன் எல்லோரையும் இவ்வாறு கவர்ந்திருக்கிறது என்பதை உலகம் புரிந்துகொள்ளும்.

-ஏப்ரல் 14, 2026: இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள். அம்பேத்கர் பௌத்தத்தை (புத்த மதம்) ஒரு பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சுதந்திரம் சார்ந்த “இயற்கை மதம்” அல்லது “தம்மமாக” கருதி ஏற்றார். 1956-ல் அவர் பௌத்தத்தைத் தழுவியது, ஜாதி மற்றும் ஏற்றத்தாழ்வற்ற, மனித நேயத்தை வலியுறுத்தும் தத்துவத்தை நோக்கிச் சென்ற ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும்.

 

Please follow and like us:
error2
fb-share-icon20
Tweet 20
fb-share-icon20
RSS20
Follow by Email2
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube