வங்கதேசத்தினர் கொஞ்சம் கவலைப்படுங்க பாஸ்!
Thank you for reading this post, don't forget to subscribe!எல்லையை கட்டுப்படுத்த டிரோன் வேணும், கேமரா வேணும், வேலி வேணும்னு கஷ்டப்படுற இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்)… இப்போ என்ன ஐடியா போட்டிருக்காங்க தெரியுமா?
பாம்பு விடுவோம். முதலை விடுவோம். பாரு எப்படி ஊடுருவுவீங்கன்னு!
ஆமாங்க, நீங்க படிச்சது சரிதான்! அந்த காலத்தில் அரசர்களின் கோட்டையை சுற்றிலும் அகலி எடுத்து அதில் முதலையை விட்டு பாதுகாத்தார்கள். இப்போது, பழையை முறை திரும்பவும் வருகிறது.

பாம்பு-முதலை
175 கிமீ சதுப்பு நிலம் — தலைவலி பிரச்சனை!
இந்தியா-வங்கதேசம் இடையே மொத்தம் 4,096.7 கிலோமீட்டர் எல்லை இருக்கு. இதில் மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா — இப்படி 5 மாநிலங்கள் பங்கு போட்டுக்கிட்டு இருக்கு.
இந்த எல்லையில் 175 கிலோமீட்டர் பகுதி? அடர் சதுப்பு நிலம். வெள்ளம் வந்தா மூழ்கிடும். வேலி போட முடியாது. கேமரா வச்சா சேறு அடிச்சு போயிடும். போர்க்கால டெக்னாலஜி எல்லாம் இங்க ‘ஆப்’!
இந்த பகுதி வழியாத்தான் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவுறாங்க. பிஎஸ்எஃப்-க்கோ இது ஒரு உலக மகா தலைவலி. [mc4wp_form id=3125]
தீர்வு என்னன்னு யோசிச்சாங்க… பாம்பு-முதலை ‘ரெடி’!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவோட வழிகாட்டுதல்ல, பிஎஸ்எஃப் இப்போ புது திட்டம் தயாரிக்குது. நதிப் பகுதிகளில் பாம்பு மற்றும் முதலைகளை விட்டுவிட்டா?
யாரும் நீந்தி வர மாட்டாங்க! யாரும் படகு போட மாட்டாங்க!! வங்கதேசத்தினருக்கு படுக்கையிலேயே தூக்கம் போயிடும்!!!
இது வெறும் கதை இல்ல — பிஎஸ்எஃப்-இன் உள்நாட்டுத் தகவல் ஆவணத்திலேயே இந்த ஆலோசனை இடம்பெற்றிருக்கு!
“ஆனா ஒரு சின்ன பிரச்சனை இருக்கு…”
ஹாஹா, இல்லாம என்ன? பாம்பும் முதலையும் ‘நண்பன் யாரு, எதிரி யாரு’ன்னு பார்க்காது இல்லையா?
அதனால, இந்த எல்லைப் பகுதியில் வசிக்கிற கிராம மக்களுக்கும் ஆபத்து வரலாம்னு கவலைப்படுறாங்க. வெள்ள காலத்துல இது இன்னும் சீரியஸான பிரச்சனையாகிடும்.
இதை பத்தி பிஎஸ்எஃப் அதிகாரி சொல்றாரு: “இது இன்னும் நடைமுறைக்கு வரலை. சாத்தியக்கூறுகளை மட்டும் ஆராய்றோம். இந்த ஊர்வனங்களை எப்படி கொண்டு வருவது, உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு வராம எப்படி நிர்வகிப்பது — இதெல்லாம் ஆய்வு நடக்குது” என்று தெரிவிக்கிறார்.
கடைசியா ஒரு கேள்வி…
டிரோன், செயற்கைக்கோள், எலக்ட்ரிக் வேலி — எல்லாத்தையும் தாண்டி, இறுதியில் பாம்பு-முதலை தான் சொல்யூஷனா?
சரிதான் பாஸ்… பிரக்டிகல் ஆச்சு! இயற்கைதான் எப்போதும் பாதுகாப்பு!











